Monday, February 21, 2011

உனக்காக காத்திருப்பேன்

இரவு கூட விடியல்தான்
நம்பிக்கை என்னும் கதிரவனாய் நீ வரும் பொழுது

கனவுகள் கூட நிஜம்தான்
அதில் உன் முகம் பார்வைக்கு வரும் பொழுது

பார்வை கூட பகைதான்
உன்னை பிரிந்து மற்றவர்களை பார்க்கும் பொழுது

சுவாசம் கூட சுமைதான்
உன்னை பிரித்து ஆக்சிஜனை மட்டும் நுகரும் பொழுது

கண்ணீர் கூட பரிசுதான்
ஒரு முறை அது உனக்காக வரும் பொழுது

தனிமை கூட இனிமைதான்
நீ மட்டும் துணைக்கு இருக்கும் பொழுது

பகைமை கூட நட்புதான்
உனக்காக என் கோபம் குறையும் பொழுது

திறமை கூட திரைதான்
உன் அழகுக்கு என் அறிவு அடிமையாகும் பொழுது

பாசம் கூட வேசம்தான்
நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது




உனக்காக யாரையும் எதிர்ப்பேன்

உனக்காக யாரையும் அனைப்பேன்

நீ எப்பொழுது வருவாய் உனக்காக காத்திருப்பேன்.


9 comments:

  1. ம்..நல்லாருக்கு முதல் வடை

    ReplyDelete
  2. இது எல்லாம் நாம் இதை விட்டு பிரிந்திருக்கும் போதுதான். ஆனால் கைக்கு வந்துவிட்டால் நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே? ரொம்ப ஆபத்தானது இது. பல பேரின் நிம்மதியை கெடுத்தது இது

    ReplyDelete
  3. //
    பாலா said...
    இது எல்லாம் நாம் இதை விட்டு பிரிந்திருக்கும் போதுதான். ஆனால் கைக்கு வந்துவிட்டால் நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே? ரொம்ப ஆபத்தானது இது. பல பேரின் நிம்மதியை கெடுத்தது இது
    //

    சரி தான் ஆனா இது தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒன்று

    ReplyDelete
  4. என்ன குண்டு... திடீர்ன்னு சீரியசா இறங்கிட்டீங்க...

    ReplyDelete
  5. அட்ராசக்க அட்ராசக்க ... அருமையான கற்பனை நண்பா

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்குது. Super!

    ReplyDelete
  7. நன்றி Philosophy Prabhakaran ,"ராஜா" ,Chitra,சி.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
  8. பணம் பாதாளம் வரை பாயும்..

    நல்ல கவிதை

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...