Wednesday, July 29, 2015

பொன்னியின் செல்வன் - பாகம் II

Part II

இந்த பார்ட்ல ஒரு செம திம்சு கட்டைய இன்ட்ரோ பண்றாரு நம்ம கல்கி அது யாருன்னா பூங்குழலி .

இந்த பூங்குழலி யாருன்னா தஞ்சாவூருல நம்ம ஹீரோ ஒரு பைய்யன்(சேந்தன் அமுதன்) வீட்ல தங்கி இருந்தாரே அவனோட ஒரு தலை ராகம். இந்த திம்சு கட்ட ஒரு Ship Driver



நம்ம திம்சு கட்ட கோடிக்கரையில(இது ஒரு கடல் சார்ந்த இடம், இங்க இருந்து தான் இலங்கைக்கு போக முடியும்) தறிகெட்டு சுத்திகிட்டு இருக்கும். பொழுது போகலைனா யாருமே இல்லாத கடல் பக்கமா போய் நல்லா பாடும் அப்புடியே ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கும்.



நம்ம ஹீரோ இப்ப இலங்கை போயாகனும் அதுக்கு இந்த ரூட்ட கூகுள் மேப் வழியா கண்டுபுடிச்சு குதிரைல குதுலமா வரும் போது. நம்ம திம்சு கட்ட தனியாவர்த்தனம் பண்ணிக்கிட்டு இருந்துச்சு.

அத கேட்டதும் இது அது இல்லன்னு நெனசுகிட்டு. இந்த வெட கோழிய புடிச்சா இத வச்சு எப்புடியாவது இலங்கைக்கு போய் பெஸ்ட் பேட்ஸ்மேன(அருள் மொழிவர்மன) மீட் பண்ணிடலாம்ன்னு திங் பண்றான் நம்ம ஹீரோ. திம்சு கட்டைய புடிக்க ஓடும் போது ஒரு பொத குழி குள்ள சிக்கிகுறான் நம்ம ஹீரோ.



அங்க இருந்து அவன் எப்புடியோ எஸ்கேப் பண்ணி வெளிய கொண்டுவரா நம்ம திம்சு கட்டை. நம்ம ஹீரோ அவ கிட்ட நீதான சேந்தன் அமுதன் லவ்வர், நீ நல்லா பாடுவன்னு சொன்னா ஆனா இப்புடி நல்லா ஓடுவன்னு அவன் சொல்லல.


பூங்குழலி - சேந்தன் அமுதன்


அதுக்கு நம்ம திம்சு கட்டை >> யாரு அந்த குருவி கூடு மண்டையனா அவன் சொன்னா நீ நம்பறதா, எனக்கு இங்க பல லவ்வர்ஸ் இருக்காங்க அத பாக்கணும்ன்னா நைட்டு எனக்கு பின்னாடி வந்து பாருன்னு சொல்றா.

சரி நா வந்த விசயத்த சொல்லிட்றன், நம்ம நாட்டு கேப்டன்(சுந்தர சோழர்) சீக்கு வந்து படுத்து கெடக்கார். அவருக்கு இலங்கைல இருந்து மருந்து வாங்கிட்டு வர போகணும் எனக்கு போக வழி சொல்லுவாயானு நம்ம ஹீரோ கேக்கறான்.

என்னோட வீட்டுக்கு கூட்டி போறன், எங்க அப்பா அதுக்கு வழி சொல்வாருன்னு சொல்லி வீட்டுக்கு கூட்டி போறா நம்ம திம்சு கட்டை. வீட்ல அவங்க அப்பா நம்ம ஹீரோவ பாத்து நேத்து தான ரெண்டு பேரு வந்து எதோ காரணத்துக்காக இலங்கை போகனும்ன்னு சொல்லி பணம் குடுத்தாங்க, அதனால என்னோட பைய்யன அவங்க கூட அனுப்பி வச்சுட்டன். இப்ப உன்ன கூட்டிட்டு போக இங்க யாருமே இல்லையே ஒரு படகு வேணா இருக்கு ஆனா அத ஓட்ட ஆள் இல்லையேன்னு சொல்றாரு.

நம்ம திம்சு கட்டை வீட்ட விட்டு வெளிய போனதும், கட்டையோட அப்பா இதோ பாரு என்னோட பொண்ணு நல்லா கடல்ல கொரங்கு பெடல் அடிப்பா அவளுக்கு தெரியாத வித்தையே இல்ல, அவள வேணா புடிசுகிட்டு போன்னு வழி சொல்றாரு. ஆனா அவ அசால்ட்டா ஒத்துக்க மாட்டா இன்னைக்கு நைட்டு தங்கிட்டு நாளைக்கு அவள சமாதன படுத்தி கூட்டிட்டு போன்னு சொல்லி தங்க வைக்குறாரு.

அன்னைக்கு நைட்டு நம்ம ஹீரோ தூங்கும் போது, நம்ம திம்சு கட்டை தனியா கெளம்புது, நம்ம ஹீரோவோட 7th Sense எப்புடியோ முழிச்சுடுச்சு, அவ பின்னாடி நூல் புடிச்சாப்பல போறான். திம்சு ஒரு எடத்துல நின்னு வெறிக்க வெறிக்க பாக்குது. அத பாத்த நம்ம ஹீரோ அப்புடி என்ன பாக்கறான்னு திரும்பி பாக்கும் போது, எவனோ போகிக்கு டையர கொளுத்தி போட்டு இருக்கான். அது திகு திகுன்னு அங்க அங்க எரியுது, அத பாத்ததும் நம்ம ஹீரோ கருப்பு மண்ட ஓடு பத்தி எரியற மாதிரி பீல் பண்றான்.



அதுக்கு அப்பறம் நம்ம ஹீரோவோட 8th Sense எம்பி குதிச்சி, அது வெறும் சில்பான்ஸ் கில்பான்ஸ் வேலன்னு தெரிஞ்சுகிட்டு, அது என்னவோ இருந்துட்டு போகட்டும் நீ வான்னு திம்சு கட்டைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடுறாரு.


அடுத்த நாள் காலைல நம்ம ஹீரோ சுறாவோடு சுறாவா சுவிம்ங்க் பண்ணுனிக்கிட்டு இருந்தாரு


அப்ப நம்ம திம்சு கட்டை கரைல வச்சுருந்த ஹீரோவோட லட்டர் பேட தூக்கிட்டு ஓடுது.அத பாத்த நம்ம ஹீரோ கால்ல ராக்கட்ட பத்த வச்ச மாதிரி சுர்ருன்னு பறந்து கரைவந்து சேந்து, கட்டைய புடிக்க காட்டுத்தனமா ஓடுறாரு. ஏன்னா அந்த லட்டர் பேடுல தான் குந்தவை அருள்மொழி வர்மனுக்கு குடுத்த கடுதாசி இருந்துச்சு.

நம்ம திம்சு கொரங்கு பொறந்த அழகான கொரங்கா இருந்துருக்கும்,அது ஒரே ஜம்புல மரத்து மேல மங்கி மாதிரி தாவி ஒக்காந்துகுச்சு.


நம்ம ஹீரோ எதுக்கு என்னோட லட்டர் பேட தூக்கிட்டு வந்தன் கேக்கும் போது. அங்க பாரு உன்ன மாறுகால் மாறுகை வாங்க பழுவேட்டையார் கூட்டம் சுத்துது, உன்ன எஸ்கேப் பண்ணத்தான் இத பண்ணன்னு சொன்னிச்சு.

நம்ம ஹீரோ இந்த கடுதாசிய படிசுட்டியான்னு கேட்டான், அதுக்கு நீ அருள்மொழி வர்மரை பாக்க போறியா அப்ப நா உனக்கு ஹெல்ப் பண்றன். இன்னைக்கு நைட்டு மட்டும் யாருக்கும் தெரியாம நா ஒரு குகைய காட்றன் அங்க குத்த வச்சு உக்காரு. விடியும் போது உன்ன வந்து பிக்கப் பண்ணிகறன் சொல்லி ஒரு குகைய காமிச்சுது நம்ம திம்சு


விடியற வரைக்கும் குகைக்குள்ள நம்ம ஹீரோ குத்த வச்சு உக்காந்து இருக்காரு


விடிஞ்சதும் நம்ம திம்சு ஹீரோவ கூட்டிட்டு ஒரு படகுல இலங்கைய நோக்கி ஜேர்னிய ஸ்டார்ட் பண்றா.போகற வழில திம்சு ஹீரோ வச்சுருந்த லட்டர குடு நானே கொண்டுபோய் குடுக்கரன்னு சொல்வா, அத தப்பா புரிஞ்சுகிட்டு ஹீரோ கடல்ல குதிசுருவாறு. ஹீரோவ காப்பாத்தி படகுல போட்டுக்கிட்டு இலங்கை தீவு பக்கம் ஒரு குட்டி தீவு இருக்கும் அதுக்கு பேரு பூத தீவு அங்க ஹீரோவ எறக்கி விட்டு இங்க இருந்து சேர் ஆட்டோ வரும் அத புடிசுகிட்டு போய் சேருன்னு கலட்டி விட்டுவுடா.

இதுக்கு நடுவுல ஆழ்வார்காட்டியான் நம்பி சோழ அமைச்சர பாத்துடு. அவர் சொல்படி அருள்மொழிவர்மனை இலங்கைலையே இருக்கும் படி சொல்ல இலங்கை வந்து இருப்பான். அவன பாத்ததும் அவனோட மிங்கிள் ஆகி பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழி வர்மன தேடி போவான் நம்ம ஹீரோ.நடுவுல முதல் பேட்ஸ்மேன் கரிகாலன் Friend பார்த்திபனும் அங்க வந்துருப்பான். ஏன்னா அவனும் பெஸ்ட்டு பேட்ஸ்மேன பாத்து ஆதித்த கரிகாலன்ட கூட்டிட்டு போகதான் வந்துருபான்.

அங்க சுத்தி இங்க சுத்தி ஒரு சோழப்படை இருக்கும் எடத்துக்கு நம்ம ஹீரோவும் ஆழ்வார்காட்டியான் நம்பியும் சேந்தாங்க. அங்க இருக்கவங்க அவங்கள அருள்மொழி வர்மன்ட கூட்டிட்டு போகும் போது, நடுவுலையே ஹீரோவோட லட்டர ஒரு ஜிம்பாடி வந்து சண்ட போட்டு எடுத்துகிட்டு போய்டும், அது யாருன்னா அதுதான் நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன்.



நம்ம ஹீரோவும், ஆதித்த கரிகாலன் Friend பார்த்திபனும் கொண்டுவந்தது ஒரே சேதி தான் இங்க இருந்து தமிழ்நாட்டுக்கு வரனும். ஆழ்வார்காட்டியான் நம்பி கொண்டுவந்த மெசேஜ் மட்டும் இங்கயே சிக்ஸ் அடிசுகிட்டு கெடக்கனும்ன்னு இருந்துச்சு, ஆனா "First impression is the best impression" சொல்வாங்க அதனால கைல மொதல்ல கெடச்ச மெசேஜ் என்னவோ நம்ம ஹீரோவோடது. தமிழ்நாட்டுக்கு போலாம்ன்னு முடிவு பண்ணுவார் நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன். இதுக்கு நடுவுல நம்ம திம்சு தளபதியோட அங்க வந்து அருள்மொழி வர்மன சிறைபிடிக்க சக்கரவர்த்தி படை தமிழ்நாட்டு கரையோரம் நட்டுகிட்டு நிக்குதுன்னு சொல்லும்.

அத கேட்டதும் சக்கரவர்த்தியே(கேப்டனே) என்ன சந்தேக பட்டுட்டார். நா ஒடனே இங்க இருந்து வெளிநடப்பு செய்றன்னு சொல்லி அங்க இருந்து தமிழ்நாட்டு கரைல நிக்குற காண்டாமிருக படைல சரணடைய யானைய கும்கியாக்கி ஒட விடுவார் நம்ம அருள்மொழி வர்மன்.

அந்த வேகத்துக்கு கூட யாரும் வர முடியல. பார்த்திபன் நா வந்த புல்லட் போட் இருக்கு அத வச்சுக்கிட்டு நா மொதல்ல தமிழ்நாட்டுக்கு போய் இங்க நடந்தத என்னோட நண்பன் கரிகாலனுக்கு சொல்றன்னு சொல்லிட்டு கெளம்பிடுவாறு.

நம்ம ஹீரோ, ஆழ்வார்காட்டியான் நம்பி , சோழ தளபதி மூணு பேரும் இலங்கை கரையோறம் நிக்குற படக பாப்பாங்க அதுல எப்புடியோ நம்ம ஹீரோ மட்டும் ஏறி குதிச்சு பெஸ்ட் பேட்ஸ்மேன காப்பாத்த முயற்சிக்கும் போது. அந்த படகுல அல்ரெடி ரெண்டு பேர்(மந்திரவாதிகள்) அருள்மொழி வர்மன கொல்ல வந்தவங்கன்னு தெரியவரும். ஹீரோ அவங்க கிட்ட மாட்டிக்குவாறு.



நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன் போன Elephant Flight ல நம்ம திம்சு கட்டை இருந்துச்சு, யான ஒரு கரையோரமா நின்னுச்சு. அங்க ஒரு கப்பல் ஒடஞ்சு போய் கரைதட்டி நின்னுச்சு. அது சக்கரவர்த்தி அனுப்பிய கப்பல்ன்னு தெரிஞ்சுது. சரி நா எப்புடியாவது தமிழ் நாட்டுக்கு போய் சேரனும். அதனால திம்சு கிட்ட என்ன நீதான் படகுல கூட்டிட்டு போகணும்ன்னு சத்தியம் வாங்கறாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்(அருள்மொழி வர்மன்).



இன்னைக்கு நைட்டு எப்புடி இங்க தங்கறதுன்னு யோசிக்கும் போது. ஒரு deaf and dumb பாட்டி அங்க இருந்துச்சு. அது இவங்க ரெண்டுபேருக்கும் வடசுட்டு குடுத்துச்சு அத பாத்ததும் அருள்மொழி வர்மனுக்கு அம்மா நியாபகம் வர ஆரமிச்சுது. நைட்டு தூங்கிட்டு காலைல எழுந்து பாத்தா பாட்டி பாய சுருட்டிகிட்டு ஓடிடுச்சு.

அந்த நேரத்துல ஆழ்வார்காட்டியான் நம்பி , சோழ தளபதி அங்க வந்து பாஸ் எங்கள ஏன் இப்புடி சிங்கிளா கலட்டி விட்டு வந்திங்க. உங்களுக்கு எதோ ஆபத்துன்னு வந்தியதேவன். குருவி மாதிரி கரைல நின்னுகிட்டு இருந்த கப்பல பறந்து பாஞ்சு புடிச்சு போய்டான், ஆனா அதுல இருதது யதோ கொள்ள கூட்டமாட்றுக்கு. அவன இந்நேரம் கொன்னுருபாங்கன்னு அருள்மொழி வர்மன்ட்ட சொன்னாங்க.

"அய்யோ என்ன காப்பாத்த வந்த காட்டு பூச்சி கடல்ல கால்ராவந்த மாதிரி சிக்கிகிச்சே", அத எப்புடியாவது வல போட்டாவது புடிக்கணும் வாங்க போலாம்ன்னு சொல்லலும் போது. புல்லட் போட்ல போன பார்த்திபன் அங்க வந்தான்.



இதோ வந்துடான்ல என்னோட சிங்கம் வந்துட்டான்ல இப்ப பாருங்கடா, இன்னக்கு தெரியும்டா அந்த கட்ட தொரையா இந்த கைபுள்ளையான்னு கத்திகிட்டு புல்லட் போட்ல ஏறி விர்ருன்னு போறாரு நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன்.

இந்த நேரத்துல நம்ம ஹீரோ எஸ்கேப் ஆகி கப்பல்ல இருந்த மந்திர வாதிகளை போட்டு தள்ள பாக்கறான். அதுக்குள்ள அவனுங்க Lifeboat வச்சு எஸ்கேப் ஆகிடறாங்க. நம்ம ஹீரோ தனியா கப்பல்ல கடல பொறி சாப்டுகிட்டே டைம் வேஸ்ட் பண்றாரு. நைட் ஆகிடுச்சு இடி மழை வேற. ஒரு இடி கப்பல்ல விழுந்துச்சு.

கப்பல் தண்ணீல மூழ்கும் போது நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் இன்னொரு பக்கம் கப்பல்ல வந்துகிட்டு இருந்தாரு. சரி ஹீரோவ காப்பாத்த Lifeboat யூஸ் பண்ணி அவன் இருக்கும் எடத்துக்கு போயாகனும் வேற வலி இல்லன்னு சொல்லி அத யூஸ் பண்றாரு. ஒடஞ்ச கப்பல் டைட்டானிக் படத்துல வர கிளைமேக்ஸ் மாதிரி மூழ்கி ஒரு பெரிய அலைய உண்டு பண்ணிச்சு அது நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன் வந்த Lifeboat ட காலி பண்ணிடுச்சு. இந்த நேரத்துல பார்த்திபன் கப்பல் காணாம போய்டுச்சு. சரி வேற வழி இல்லன்னு கப்பல்ல இருந்த படுதாவ புடிசுகிட்டு ஹாயா ஸ்விம் பண்ண ஆரமிச்சாங்க நம்ம ஹீரோவும் அருள்மொழி வர்மனும்.

கொஞ்ச நேரம் போனது இலங்கைல இருந்து நம்ம திம்சு கட்டை தனியா ஒரு சின்ன படகுல அந்த பக்கமா பாட்டு பாடிகிட்டு வந்துச்சு. அத பாத்ததும் நம்ம ஹீரோவுக்கு அல்வாவ பாத்த ஆனந்தம் அந்த படகுல எப்புடியோ எரிக்குறாங்க

இதோட ரெண்டாவது பார்ட் முடிஞ்சுது

அடுத்த பார்ட்டல நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன் அருள்மொழி வர்மன் தமிழ்நாட்டுக்கு எப்புடி போனாரு அங்க போய் சக்கரவர்த்தியை பாத்து நா ஏதும் தப்பு பண்ணலன்னு சொன்னாரா இல்லையான்றது தான்.

சரி அடுத்த பார்ட்ட அப்பறம் சொல்றன்.

Tuesday, July 28, 2015

பொன்னியின் செல்வன் - பாகம் I

கல்கி விக்ஸ்சுன்றத தான் 1400 பக்கத்துக்கு மேல சுத்தி சுத்தி எழுதி இருக்காரு

மொதல்ல இந்த கதைல வர கதாபாத்திரங்கள பாத்துருவோம்



Part - 1

கத நடக்கறப்ப சக்கரவர்த்தியா இருக்க நம்ம சுந்தர சோழருக்கு மூணு பிள்ளைகள்

1.ஆதித்த கரிகாலன் (அண்ணன்)
2.குந்தவை(அருள்மொழிவர்மன்னோட அக்கா)
3.அருள்மொழிவர்மன்(தம்பி)


ஆதித்த கரிகாலன் தன்னோட படை வீரனான வல்லவரையன் வந்தியத்தேவன் (நம்ம கதையோட ஹீரோ) ரெண்டு லட்டர் குடுத்து ஒன்னு அப்பாவுக்கு இன்னொன்னு அவரோட சிஸ்டருக்கும் கொடுத்துருன்னு சொல்லி அனுப்பி வைக்கறாரு.


வல்லவரையன் வந்தியத்தேவன்


அத எடுத்துகிட்டு நம்ம ஹீரோ வந்தியத்தேவன் குதிரைல காஞ்சில இருந்து தஞ்சாவூர்க்கு ஜிங் ஜக் ஜிங் ஜக்ன்னு போறான்

போகும் போது தஞ்சாவூர கட்டி காக்கற ஒரு கெழட்டு சிங்கத்த(பழுவேட்டரையார்) பத்தி கேள்வி படறான்.

அந்த சிங்கம் 24 டைம் சண்ட போட்டு 64 டைம் கடி வாங்கிருக்கு. ரொம்ப மோசமான பிராணி அது.


கெழட்டு சிங்கம்(பழுவேட்டரையார்)


அந்த சிங்கதோட பாதுகாப்புல தான் சுந்தர சோழர் house arrest ல இருக்காரு.

தஞ்சாவூர் போறதுக்கு முன்ன கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் கொஞ்சம் நேரம் ஸ்டே பண்ணிட்டு போலாம்ன்னு ஒரு எண்ணம், ஏன்னா வந்தியத்தேவன் friend அந்த நாட்டு ராஜாவோட பைய்யன்.

போற வழில ஆழ்வார்க்கடியான் நம்பி ன்னு ஒரு கேரக்டர் அது ஒரு பெருமாள் பைத்தியம், அது இவன் கிட்ட பழுவேட்டரையார் பொஞ்சாதிதான் என்னோட தங்கச்சி அவள பாக்க ஹெல்ப் பண்றியான்னு கேக்குது. அவன எப்புடியோ கலட்டி விட்டு நம்ம ஹீரோ Friend Palace க்கு போறான்.


ஆழ்வார்க்கடியான் நம்பி


Friend Palace முன்னாடி இருக்க சொல்ஜர்சோட சண்ட போடும் போது. ஹீரோவோட Friend(கந்தமாறான்) பிக்கப்பண்ணி உள்ள கூட்டி போறான். அன்னைக்கு நைட்டு ஒரு மீட்டிங் நடக்குது, அங்க Mr.கெழட்டு சிங்கம் தான் சீப் கெஸ்ட் அது தன்னோட புதுசா கல்யாணம் பண்ண பொஞ்சாதிய பொத்தனாப்பல கூட்டிட்டு வந்துருக்கு.

அந்த கூட்டத்துல கெழட்டு சிங்கம் ஒரு ஸ்பீச் குடுக்குது. இப்ப சக்கரவர்த்தியா இருக்க நம்ம சுந்தர சோழர் சீக்கிரம் புட்டுக்குவாறு. அவருக்கு அடுத்து யாரு டீமுக்கு(நாட்டுக்கு) கேப்டன்னு நாம முடிவு பண்ணனும்ன்னு டிஸ்கஸ் பண்றாரு. அங்க இருந்தவங்க பலர் கங்கூலிக்கு அடுத்து தோனி மாதிரி அப்பாவுக்கு அடுத்து பையன்(அருள்மொழிவர்மன்) தான்னு சொல்றாங்க. ஏன்னா இப்ப அவருதான் ஸ்ரீலங்கா போய் சிக்சர் அடிசுகிட்டு(அட போர் செஞ்சி நாட்ட புடிசுகிட்டு இருக்காறாம்) இருக்காருன்னு காரணம் சொல்றாங்க.


அருள்மொழிவர்மன்


அத கேட்ட நம்ம சிங்கம் சீறி பாஞ்சு அடுத்து நம்ம சக்கரவர்த்தியோட அண்ணன்(கண்டராதித்தர்) பைய்யன் மதுராந்தக சோழர் தான் கேப்டனா வரனும். அவன் தான் சிக்ஸ் அடிச்சு சீக்கிரம் அவுட்டாகாம கடைசி வரைக்கும் சிங்கிள் அடிச்சு டீம காப்பத்துவான்னு முடிவு பண்றாரு. இங்க ஒரு ட்விஸ்ட்டு சிங்கம் கூட்டிடு வந்தது தன்னோட பொஞ்சாதி இல்ல அதுல வந்தது சிங்கிள் சிங்கம் மதுராந்தக சோழர், சரி பெரிய தலையே சொல்லிடுச்சு இப்ப இருக்க கேப்டனுக்கு ஆப்பு வைக்க எல்லாரும் முடிவு பண்றாங்க.


மதுராந்தக சோழர்


இந்த டிஸ்க்கசன நம்ம ஹீரோ வந்தியதேவன் ஒளிஞ்சு இருந்து கேட்டுட்டு அடுத்த நாள் எப்புடியாவது இப்ப இருக்க கேப்டன்ட்ட(சுந்தர சோழருக்கு) சொல்லிடனும்ன்னு கெளம்பரான்.

அவன் போகும் போது வழில பாத்த ஆழ்வார்க்கடியான் நம்பி சந்திகிறான். அடுத்து யார் டீம் கேப்டனா வருவான்னு தெரியனுமா குடந்தைல குறி சொல்ற கோடங்கி ஒருத்தன் இருக்கான் அவன போய் பாருன்னு சொல்லி அனுப்பறான்

நம்ம ஹீரோ அங்க போகும் போது, ஆதித்த கரிகாலன் சிஸ்டர் குந்தவை அவளோட க்ளோஸ் Friend வானதிய கூட்டிட்டு குறி கேக்க வந்துருக்கு. குந்தவைக்கு என்ன எண்ணம்னா தன்னோட தம்பிய(அருள்மொழிவர்மன) வானதிக்கு செட் பண்ணி விடறது தான். அதனால இவளுக்கு வர புருஷன் எப்புடி பல வருஷம் புஸ்ட்டியா இருபானான்னு கேக்க வந்தா.அப்ப நம்ம ஹீரோ என்ட்ரி அங்க இருந்த குந்தவைய பாத்ததும்


குந்தவை- வானதி


அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு கண்ணேன்னு நம்ம ஹீரோ மைண்ட்ல ஏஆர் ரகுமான் டியூன் போடறாரு

கொஞ்ச நேரத்துல அத மறந்து வந்த விசயத்த கோடங்கி கிட்ட கேக்க, கோடாங்கி நம்ம ஹீரோ பார்வைல இருந்து பத்திரமா குந்தவையும் வானதியும் விபூதி குடுத்து எஸ்கேப் பண்றார்.இப்ப இருக்க கேப்டன் சீக்கிரம் புட்டுகுவாறு அவருக்கு அடுத்து அவர் பைய்யன் தான் அடுத்த கேப்டன்னு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்குறாரு கோடாங்கி.

சரி எல்லாம் கேட்டாசுன்னு குதுரைய உருட்டிகிட்டு போற வழில ஒரு பல்லக்க பாக்குறாரு. அங்க ஒரு ட்விஸ்ட் அதுல வந்தது நம்ம கெழட்டு சிங்கத்தோட(பழுவேட்டரையார்) பொஞ்சாதி நந்தினி, லைட்டா இந்த கேரக்டர நியாபகம் வச்சுக்குங்க இது அப்புடியே படையப்பா நீலாம்பரி சாயல் அவ்ளோதான்.


நந்தினி


நந்திநிகிட்ட நம்ம ஹீரோ ஹெல்ப் கேக்கறாரு எப்புடியாவது தஞ்சாவூர் கோட்டைகுள்ள போய் கேப்டன்(சுந்தர சோழர) பாக்கணும்ன்னு. நந்தினி இவனால ஏதாவது காரியம் ஆகும்ன்னு முடிவு பண்ணி ஒரு பாஸ்வேர்ட்ட(முத்திரை மோதிரம்) குடுத்து இத வச்சு உள்ளவா. அங்க வந்து என்ன பாரு உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகனும்ன்னு சொல்லி அனுப்புது.

நம்ம ஹீரோ அத நம்பி தஞ்சாவூர் போறான். வழில ஒரு நாள் தங்க வேணும்ன்னு ஒரு பைய்யண்ட(சேந்தன் அமுதன்) வாடகைக்கு வீடு கெடைக்குமான்னு நம்ம ஹீரோ கேக்கறான். அதுக்கு என்ன என்னோட ஹவுஸ்லையே ஸ்டே பண்ணிக்கு என்னோட deaf and dumb மம்மி இருக்கு உன்ன பாத்துகும்ன்னு சொல்றான்.

உனக்கு கல்யாணம் ஆச்சான்னு நம்ம ஹீரோ அந்த பையன்ட கேக்கறான். அதுக்கு அவன் என்னோட லவ்வர் எதோ கடல் பக்கம் படகோட்டிகிட்டு இருக்கா அவளதான் கட்டிகுவேன்னு சொல்றான். சரின்னு அன்னைக்கு நைட்டு அங்க தங்கிட்டு மறுநாள் தஞ்சை கோட்டைக்கு என்ட்ரி கொடுக்குறார் நம்ம ஹீரோ.

கோட்டைகுள்ள பாஸ்வேர்ட்ட(முத்திரை மொதிரத்த) வச்சு உள்ள போனதும். நம்ம கெழட்டு சிங்கத்தோட தம்பி சிங்கம்(சின்ன பழுவேட்டரையார்) வழி மறிக்குது. நம்ம ஹீரோ வந்த விசயத்த சொல்றான், கேப்டன(சுந்தர சோழர) பாக்கணும் வைஸ் கேப்டன்(ஆதித்த கரிகாலன்) மெசேஜ் குடுத்து விடுருக்காறு அத நா பாஸ் பண்ணனும்ன்னு.


சின்ன பழுவேட்டரையார்


சரி பாஸ்வேர்ட்ட(முத்திரை மொதிரம்) அண்ணன் கெழட்டு சிங்கம் தான் குடுத்து இருக்கும். இவன தடுத்தா பின்னாடி அது வந்து நம்மள கடிசுரும்ன்னு கேப்டன்ட(சுந்தர சோழர்ட) கூட்டிட்டு போய் விட்டுடுது இந்த இளம் சிங்கம்.

நம்ம ஹீரோ கொண்டுவந்த லட்டர்ல இருந்த மெசேஜ் என்னன்னா

(ஆதித்த கரிகாலன்) >> "யப்பா உனக்காக நா Gold Palace கட்டி வச்சுருக்கேன் நீ வந்து விழாவ சிறப்பிச்சுட்டு போகணும்ன்னு எழுதி இருக்கு ".


ஆதித்த கரிகாலன்


அதுக்கு நம்ம கேப்டன் நானே வயசாகி சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கன் பாப்போம்ன்னு சொல்லிட்டு, வந்தது வந்துட்ட ரெண்டு நாள் இங்க தங்கி இருந்து சாப்ட்டு போன்னு சொல்லி நம்ம ஹீரோவ கெட்ஸ் ஹவுஸ்ல தங்க வைக்குறாரு.

ஒரு மெசேஜ் பாஸ் பண்ணியாச்சு இன்னொன்னு ஆதித்த கரிகாலன் சிஸ்டருக்கு குடுக்கணும். அதுக்கு முன்ன நாம கோட்டைக்கு உள்ள வர பாஸ்வேர்ட் குடுத்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதிய பாத்து தேங்க்ஸ் சொல்லிட்டு போவம்ன்னு அவ இருக்க எடத்துக்கு எஸ்கேப் ஆகி நம்ம ஹீரோ போய் மீட் பண்றான்.

அவன பாத்து நந்தினி, நீ எதுக்கு வந்தன்னு கேக்கும் போது. ஆதித்த கரிகாலன் என்னைய கூப்ட்டு ரெண்டு லட்டர் குடுத்து ஒன்னு அவரோட அப்பாவுக்கு இன்னொன்னு அவரோட சிஸ்டருக்கும் கொடுத்துருன்னு சொன்னாரு அதான் வந்தேன் சொல்றான். கோட்டைகுள்ள வர உதவி தேவபட்டுச்சு வழில பாத்த உங்க அண்ணன்னு(ஆழ்வார்க்கடியான் நம்பி) உங்கள பாத்தா ஈசியா உள்ள போய்டலாம்ன்னு சொன்னா அதான் உங்கள புடிச்சன்னு சொன்னான்.

சரி இன்னொரு லட்டர் இன்னும் இருக்கான்னு கேட்டு அத வங்கி படிச்ச நந்தினி, நீலாம்பரியா மாறி இத நீ எடுத்துகிட்டு போ உனக்கு பண்ண ஹெல்புக்கு எனக்கு அவ என்ன Reply பண்றாலோ அத எனக்கு cc போடு. இப்ப நீ அந்த மரத்தடியில போய் ஒளிஞ்சுக்கோ, இங்க இருந்து யாருக்கும் தெரியாம உன்ன எஸ்கேப் பண்றன்னு சொன்னா. அவனும் அத கேட்டு ஒரு மரத்துக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான்

அந்த நேரம் பாத்து நம்ம கெழட்டு சிங்கம் என்ட்ரி. அது வந்து தம்பி சிங்கத்த லைட்டா கடிச்சுட்டு( நா எவனுக்கும் பாஸ்வேர்ட் குடுக்கல நீ எப்புடி அவன உள்ள விட்டன்னு திட்டிட்டு), தன்னோட பொஞ்சாதிய பாக்க ஓடோடி வந்துச்சு.

கெழட்டு சிங்கம் வரதுக்குள்ள ஒரு மந்திரவாதி நந்தினிய பாக்க சைடு வங்கி வரான். அவன் வந்து என்ன சிங்கத்துக்கு பொஞ்சாதி ஆனதும் சிலுபிக்கிட்டு நிக்குரியா உன்ன அன்னைக்கே கொன்னுருக்கனும்ன்னு கொந்தளிக்கும் போது.


மந்திரவாதி


நந்தினி இந்த சோழ சாம்ராஜ டீமையே கூண்டோட போட்டு தள்ள தான் அந்த கெழட்டு சிங்கத்துக்கு செட் ஆனன் மூடிகிட்டு போடான்னு சொல்லிட்டு. வந்தது வந்த அங்க பாரு ஒருத்த மர கெளைய புடிச்சு மேஞ்சுகிட்டு இருக்கான் அவன் கூட்டு போய் வெளிய விடுன்னு சொல்றா.

அது எனக்கு தேவ இல்ல அந்த கெழட்டு சிங்கம் என்ன கடிக்கறதுகுள்ள நா எஸ்கேப் ஆகறன்னு சொல்லி, அவன் தப்பிச்சா போதும்ன்னு ஓடிபோறான்

அதுக்கு அப்பறம் கெழட்டு சிங்கம் வந்து நந்தினிய கொஞ்சிட்டு அது வேற வேல இருக்குன்னு வெளி ஊர் போய்டுது.

சரி இது வேலைக்கு ஆகாதுன்னு நம்ம ஹீரோ பாதால நுழைவாயில் வழியா எஸ்கேப் ஆகி வெளிய போகும் போது ஹீரோவோட Friend கந்தமாறன் முதுவுல குத்துப்பட்டு கெடக்கான். அவன தூக்கிட்டு போய் நம்ம ஹீரோ இதுக்கு முன்ன தங்கி இருந்த அந்த பைய்யன்(செந்தேல் அமுதன்) வீட்ல போட்டு. குந்தவைய பாக்க குதரைல கெளம்பிட்டான்.


கந்தமாறன்


இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ ஏதோ ராஜ துரோகம் பண்ண மாதிரி அவன புடிச்சு மறுகால் மாறுகை வாங்க சொல்லி. நம்ம கெழட்டு சிங்கத்தோட தம்பி சிங்கம் ஹீரோவ புடிக்க ஆள் அனுப்பறாரு. நம்ம ஹீரோவ புடிக்க வந்தவங்க ஹீரோவுக்கு பதிலா ஹீரோவோட Friend கந்தமாறனை லபக்குன்னு தூக்கிட்டு போய்டறாங்க.

குந்தவை பாக்க பழையாறை வரைக்கும் போன நம்ம ஹீரோ அங்கு வழியில் வந்த ஆழ்வார்க்கடியான் நம்பி ஹெல்போடு குந்தவைய மீட் பண்றான் நம்ம ஹீரோ

வந்த வேலை முடிஞ்சுதுன்னு லட்டர குடுத்துட்டு எஸ் ஆக பாக்கும் போது. அதுல ஆதித்த கரிகாலன் >> அப்பாவுக்கு ஆபத்து அடுத்த கேப்டனா மதுராந்தக சோழர கொண்டுவரதுக்காக நம்ம அப்பாவ போட போறங்கன்னு எழுதி இருந்துச்சு.

அத படிச்சதும் இவன்தான் நமக்கு கிடைத்த அடிமை இவனை விடகூடாதுன்னு குந்தவை முடிவு பண்ணி ஒரு லட்டர் எழுதி அருள்மொழிவர்மனை உடனே இங்க கூட்டிட்டு வான்னு சொல்லி ஹீரோ கைல லட்டர குடுத்து இலங்கைக்கு அவன பார்சல் பண்றா.

இதுக்கு நடுவுல குந்தவைக்கும் நம்ம ஹீரோவுக்கும் "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" கதை எல்லாம் நடந்துச்சு விடுங்க

சும்மா எப்புடி ஹீரோவா அனுப்பறது ஏதாவது காரணம் வேணாமா. அப்பாவுக்கு சீக்கு அவருக்கு மருந்துவாங்க இலங்கைக்கு டாக்டர் பைய்யன ஹிரோவோட துனைக்கு அனுப்பி வைக்கறாங்க நம்ம குந்தவை

இங்க இந்த அமுளி துமுளி நடக்கும் போது லட்டர் போட்ட நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன். ஹீரோ ஒரு ஸ்பை அவன மாறுகால் மாறுகை வாங்க போறங்கன்னு தெரிஞ்சதும் சூடாகறாறு

அத பாத்த அவனோட தாத்தா, இப்ப நீ அந்த கெழட்டு சிங்கத்த கடிக்க போனின்னா. உங்கப்பா மண்டைய போட்ருவான் அதனால நீ உன்னோட பெஸ்ட் பேட்ஸ்மேன(அருள்மொழி வர்மன்ன) இங்க கூட்டிட்டுவா அதுக்கு அப்பறம் நீ போன்னு அட்வைஸ் பண்றாரு.

சரி அல்ரெடி ஒருத்தன அனுபியாச்சுன்னு அதனால கைல இருக்க இன்னொரு அடிமை Friend பார்த்திபன்ன அனுப்ப முடிவு பண்றாங்க . அவன் அந்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதிதான் இதுக்கு காரணம் அவள் போடணும்ன்னு கூவும் போது. நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் பிளாஷ் பேக் ஓபன் பண்றார்.


பார்த்திபன்


அந்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதி நந்தினி தான் நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் X-Lover. பல வருசத்துக்கு முன்ன எதிரி டீமோட கேப்டன் விக்கட்ட(பாண்டிய மன்னன் வீரபாண்டியனை​) எடுக்க போகும் போது. நம்ம ஆளோட X-Lover தான் எதிர் டீம் கேப்டன்(வீரபாண்டியன்) செட்டபுன்னு தெரிய வருது. அவளும் வந்து என்னோட செல்லத்த விட்டுடுங்க , என்னோட அமுல் பேபிய விட்டுடுங்கன்னு கெஞ்சி பாத்தா. கடுப்பான நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் கைல இருந்த பால வீரபாண்டியன் நடு மண்டையில போட்டு விக்கட்ட அழகா தூக்கிட்டுவாறு. அதுக்கு அப்பறம் சரி போனா போகுது கழுத அவளுக்கு வாழ்க்க குடுப்பம்ன்னு தேடனா. அந்த நந்தினி நைசா நழுவி கெழட்டு சிங்கத்துகிட்ட செட் ஆகிடும்.


வீரபாண்டியன்


இதான் மொத பார்ட்டு கத, நம்ம ஹீரோ இலங்கை போனான்னா பெஸ்ட் பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன பாத்தானான்றதுதான் ரெண்டாவது பார்ட்

இதுக்கே நாக்கு தள்ளுது, சரி அடுத்த பார்ட்ட அப்பறம் சொல்றன்.

.

Related Posts Plugin for WordPress, Blogger...