Monday, January 24, 2011

சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால் - 4

இது ஒரு தொடர் பதிவு முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.

நம்ம சத்தியராஜ், கவுண்டமணியும் ஒரு புது ப்ராஜெக்ட் ஒர்குக்காக நம்ம டாக்டர் தம்பிகூட கோத்து விடறாரு நம்ம சூப்பர் ஸ்டார் டிஎல்.

கவுண்டமணி சத்தியராஜிடம், இந்த கப்சாவாயான் அந்த அனுமார் கூட கோத்து விட்டுடானே அவன, அட விடு கவுண்டரே பன்னிக்கு வாக்கபட்டா 4 எடத்துல வாய் வச்சுதான ஆகணும் வாங்க அந்த கொரங்குகிட்ட பொய் என்னான்னு கேப்போம்.

விஜய் அவுரு கேபின்ல குதிச்சு குதிச்சு ப்ரோக்ராம் போட்டுக்கிட்டு இருகாரு.

கவுண்டமணி இத பாத்துட்டு., டே நாதாரி எண்டா இந்த அலும்பு ஒன்னோடது ஒரு எடத்துல ஒக்காராதா.

நாங்கல்லாம் குருவி மாதிரி பறந்து பறந்துதான் டைப்படிபோம்.

இந்த கொரங்கு என்னா பேசுது பத்தியா இதுக்குதான் அந்த கப்சாவாயன ரெண்டு அப்பு அப்பலாமுன்னு சொன்ன கேட்டியா நீ, அட விடுங்க நாம வந்த வேலைய பாப்போம்.

கவுண்டர் விஜயிடம், டே ராசா நம்மள ஒரு புது ப்ரொஜெக்ட்ல கோத்து விட்ருக்கு அந்த டிஎல், வா அத பத்தி பேசுவோம், சொல்லு நீ எதுல நல்லா பண்ணுவ, நீ இங்க யாரு.

இதல்லாம் பாத்து கூடவா நா யாருன்னு தெரியல

ஜாவானா நா கிளாஸ்

.நெட் நா மாசு

பிஹஜ்பி நா பாசு

ஆரகல் நா ஆலினால்


இப்ப நீ சொன்ன இந்த வாக்கியத்த அப்புடியியே பிடிஎப் ஆ கன்வர்ட் பண்ணி எல்லாருக்கும் மெயில் அனுப்பு அத பாத்து படிச்சி ஒனக்கு பின்னால வர சந்ததிகள் தெளிவா நடந்துகுவாங்கா, அடதூ மீன் சொம்பு தலையா போ போய் அந்த சேர எடுத்து போடு.

சரிங்கண்ணா,

சதியராஜி கவுண்டமணியிடம்,ஏனுங்க கவுண்டரே இப்புடி மெரட்டுரிங்க புள்ள பயணத்துற போகுது,

இது புள்ளயா இது தொல்லப்பா, சரி இந்த ப்ராஜெக்ட் டெட் லைன் எப்ப,அது இன்னும் ஒரு 5 மாசாம் இருக்கு, ஓ அதுவரைக்கும் இந்த நாதாரியோடா குப்பகொட்டனுமா.

விஜய் சேர கொண்டுவந்து கவுண்டமணி முன்னால போட்டு கை கட்டி நிகுராறு.

கவுண்டமணி விஜய பாத்து, இத பார் நாங்க தான் இந்த ப்ராஜெக்ட் ஹெட் எங்கயாவது வால ஆட்டுன மவனே ஒன்ன ஒருவாரம் டே அண்ட் நைட் தூங்காம பொட்டி தட்டவுட்டுவேன் ஜாகுரத.

சரிங்கண்ணா!.

சரி ஜாவால ஒனக்கு என்ன தெரியுமா.

நீங்க படிச்சா ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்ட்டர்ணா,

அடிங்க பிஞ்ச தலையா, பன்னி மாதிரி வாய வச்சுக்கிட்டு பஞ்சு பஞ்சு., ஒழுங்கா கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு இல்ல நாக்குல நாட்டு வேடிகுன்ட வச்சுருவன்.

கவுண்டமணி விஜய் மயிர புடிச்சு ஆட்டிகிட்டு இருகாரு ,
மாம்ஸ் விடுங்க மாம்ஸ் அவன்ட உருபுடியா இருக்கறது மண்டைல அது ஒன்னு தான்.

இந்த வாய்என்ன பண்ணனாலும் நிக்கமாட்டுகுதுபா, தொடர்ந்து தொல்ல குடுத்துகிட்டே இருக்கு., இவன் வாய எப்புடித்தான் அடகரதோ.

விஜய் அத கேட்டுட்டு சூடாஹி,
கையாள அணைகட்டி தடுக்கா இது ஒன்னும் கால்வாய் இல்ல என்னோடா வாய்.

அடிங்க ரப்பர் வாயா, ஒழுங்கா வாய மூடல மவுசுக்கு பதிலா ஒன்னோட நாக்க வச்சு தேச்சுபுடுவன்., ஒழுங்கா நா சொல்லறத கேலு, இங்க பாரு நாங்க ப்ரோக்ராம் அடிச்சோம்னா ஒரு மாசாம் அடி விழுந்துகிட்டே இருக்கும் குறுக்க வந்த ஒனக்கும் விழும்.

விஜய் இத கேட்டுட்டு பொங்கி, நீ அடிச்சா அடி விழும் நா அடிச்சா இடிவிழும்.

அப்பவே சொன்ன இவன சரி பண்ண குச்சி எட்துகிட்டு வரலாமுன்னு கேட்டியா நீ.எனக்கு மூடு அப்சட் ஆகிடுச்சு வா போய் ஒரு கட்டிங் போட்டுட்டு வரலாம்.

கவுண்டமணியும் சத்தியராஜ் கொரங்கு தொல்ல தங்காமா ஒயின் சாப் நோக்கி ஓடுறாங்க.

- தொடரும்

7 comments:

  1. செமையா எழுதியிருக்கீங்க... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. நன்றி NKS.ஹாஜா மைதீன்,Philosophy Prabhakaran!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...