Monday, August 3, 2015

பொன்னியின் செல்வன் - பாகம் III

Part - III

எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு Boat ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க

திம்சு அருள்மொழிவர்மன சைடுவாக்குல சைட்டடிச்சுகிட்டு Boat ட ஓட்டிகிட்டு வருது. சரி இப்புடியே கோடிக்கரைக்கு போனா நம்ம கெழட்டு சிங்கம் அங்க இருக்கும் அது வாய்ல மாட்ட கூடாதுன்னு பேசிகிட்டு இருக்கும் போது.

நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன்(அருள்மொழிவர்மன்) வொய்டு போன பால மண்டைல வாங்கன மாதிரி மெண்டல் ஆகிடுவாறு.

,
நிலா...நிலா...நிலா


இத பாத்த நம்ம ஹீரோ இவர இப்புடியே விட முடியாது, Boat ட லெப்ட் ஒடச்சு ரைட்டு திருப்பு ஒரு கூவம் இருக்கு அது வழியா போனா நாகபட்டினம் வந்துரும். அங்க இருக்க மெண்டல் ஹாஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட்மென்ட் பாப்போம். சரியானதும் குந்தவைகிட்ட இவர கூட்டிட்டு போவம்ன்னு முடிவு பண்றாங்க.

இந்த நேரத்துல நம்ம கெழட்டு சிங்கம் நந்தினியோட அந்த கடற்கரை ஒரமா பீச் ரெஸ்டாரன்ட்ல ஸ்டே பண்ணிக்கிட்டு இருந்துச்சு. ஏன்னா நம்ம ஹீரோவ போடணும் அத்தோட பெஸ்ட் பேட்ஸ்மேன கேம்ப்ளிங் கேசுல உள்ள தூக்கி போடணும் இதான் ப்ளான்.

அந்த நேரம் பாத்து கரிகாலன் Friend பார்த்திபன் புல்லட் போட் ரொம்ப அடிவாங்கி அந்த பக்கமா வந்துச்சு, அத பாத்த நம்ம கெழட்டு சிங்கம் பால் புட்டிய பாத்த பச்ச புள்ள மாதிரி துள்ளி குதிச்சு போனாரு. ஏன்னா அதுல ஒரு வேள பெட்ஸ் பேட்ஸ்மேன் வரலாம் இல்லையா. கெழட்டு சிங்கத்த பாத்ததும் ஓடிவந்த பார்த்திபன் நந்தினிய பாத்ததும் பீர்ல போட்ட ஐஸ் கட்டி மாதிரி கரைஞ்சு போறான்.


வாவ் என்ன ஒரு அம்சமான பிகர்


சிங்கம் அவன கடிக்குற மாதிரி பாத்து எங்க அந்த அருள்மொழி வர்மன்னு கேக்கும் போது. பார்த்திபன் சுய நினைவு வந்து வரும்போது வந்திதேவன காப்பாத்த கடல்ல குதிச்சாரு அத்தோட ஆளகானும். இந்நேரம் சிவலோகத்துக்கு டிராவல் ஆகிட்டு இருப்பாருன்னு சொன்னதும். கெழட்டு சிங்கம் நெஞ்ச புடிசுகிட்டு விழுந்துடுச்சு.



ஏன்னா அருள்மொழி வர்மன் போய்டானா கெழட்டு சிங்கத்த செதைச்சுருவாங்கன்னு பயம் வந்துருச்சு அதுக்கு.

அப்பறம் நந்தினி சிங்கத்த தேத்தி அருள்மொழிவர்மன் எதையாவது தொத்திகிட்டு உசுரோட இங்க வரலாம்ன்னு சொல்லி சமாதன படுத்துச்சு. ரெண்டு நாள் அங்க டேரா போட்டாங்க எல்லாரும்.

இதுக்கு நடுவுல நந்தினி பார்திபன்ட ஒரு லட்டர குடுத்து ஆதித்த கரிகாலன இங்க கூட்டிட்டுவா அவருக்கும் மதுராந்த சோழருக்கும் பேச்சு வார்த்த நடத்தி டீம பிரிச்சு குடுத்துருவோம்ன்னு சொன்னுச்சு. பார்த்திபனும் மகுடிக்கு மயங்கன சர்ப்பம் போல ஒத்துகிட்டான் ஏன்னா அவனுக்கும் நந்தினி மேல ஒரு கண்ணு

இதுக்கு நடுலுல திம்சு Boat ட நிறுத்திட்டு நம்ம ஹீரோ. நா இங்க இருந்து குதுரைல நாகபட்டினம் வரன் உன்னோட உன் லவ்வர் சேந்தன் அமுதன் வருவான். நா அருள்மொழி வர்மன் செத்து போயிட்டதா கத கட்டி விட்டு அங்க வரன் நீங்க போங்கன்னு வழி அனுப்பி வைக்குறான்.

போகற வழில மதுராந்தகர பாக்குறான் நம்ம ஹீரோ. இதான் சரி இவர புடிச்சா குந்தவை இருக்க எடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாம போயிடலாம்ன்னு முடிவு பண்ணி. அவருக்கு முன்னாடி போய் லூசு மாதிரி ஐயோ மன்னா நீங்க ஏன் பழுவேட்டரையாரோட செட்டப்பா அன்னைக்கு போனிங்கன்னு கீழ விழுந்து நெஞ்ச புடிசுகிட்டு அழுதான் நம்ம ஹீரோ.


ஐயோ...ஐயோ...


மதுராந்தகன் மெர்சலாகி இவனுக்கு எப்புடி நாம பொம்பள வேஷம் போட்டது தெரியும்ன்னு நெனைக்கும் போது. நம்ம ஹீரோ துள்ளி குதிச்சு நா ஒரு மெஜிசியன் எனக்கு எல்லாம் தெரியும், இப்ப இலங்கைல இருந்து வர பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அவுட் ஆகிருப்பாருன்னு சொல்லுவான்.இத கேட்டதும் ஜர்க்காகி ஹீரோவ குண்டுகட்டா தூக்கிட்டு Palace க்கு போய்டுவாரு மதுராந்தகர்.

அங்க போனதும் மதுராந்தகன் மம்மி ஈசா யோகாவுல இருந்து வந்த சத்குரு சாமியார்கிட்ட ஆசிர்வாதம் வாங்க சொல்லும். அதுக்கு மதுராந்தகன் மம்மி எதுக்கு என்ன இப்புடி டார்ச்சர் பண்ற நா தான் அடுத்த கேப்ட்டன் எதுக்கு இவனுங்க காலுல எல்லாம் விழனும்ன்னு கேக்கும் போது. உங்கப்பா ஒரு பெரிய யோகா டீச்சரா வர ஆசைபட்டார், அவரால வர முடியல அதனால உன்ன ஒரு பெரிய யோகா மாஸ்ட்டரா ஆக்கலாம்ன்னு முடிவு பண்ணிடேன்னு சொல்லும். இத கேட்டதும் மதுராந்தகன் மம்மி நீ பெத்த தாய் இல்ல பெத்த பேய்ன்னு சொல்லிட்டு காண்டாகி ஓடிருவாரு

இந்த நேரத்துல குந்தவை அங்க விசிட் பண்ண வரும். அத பாத்ததும் நம்ம ஹீரோ குந்தவைய தனியா தள்ளிகிட்டு போய்


Hai angle ... அப்புடி ஓரமா வரியா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்


பெஸ்ட்டு பேட்ஸ்மேன் இன்னும் ஆன்லைன்ல தான் இருக்காரு. அவர் இப்ப நாகபட்டினம் மெண்டல் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கன், நீங்க போனா பாக்கலாம்ன்னு சொல்லுவான். சரி ஜனங்க எல்லாம் இப்ப பெஸ்ட் பேட்ஸ்மேன் செத்து போயிட்டதா நெனச்சு எல்லா சோசியல் மீடியாவுளையும் #Rip போட்டுக்கிட்டு இருக்காங்க. நீ வந்து அவங்களுக்கு கண்டேன் சீதையைன்னு சொல்லு அப்பத்தான் அவங்க அடங்குவாங்க வான்னு கூட்டிகிட்டு மொட்ட மாடிக்கு போறா குந்தவை.

மொட்ட மாடிக்கு போனதும் ஹீரோவ பாத்த ஒருத்தன் இவன்தான் Spy இவன் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன போட்டுதள்ளிட்டான்னு மைக்கு வச்சு கத்துவான். அத கேட்டு காண்டாகி நம்ம ஹீரோ தலை கீழா சம்மர் சால்ட் அடிச்சு அவன் மேல பாயிவாறு.


நம்ம ஹீரோ தலை கீழா சம்மர் சால்ட் அடிச்சப்ப எடுத்த செல்பி


அங்க இருந்து குதிச்சு சண்ட போடும் போது அங்க வந்த முதல் மந்திரி அவங்கல கைய கால கட்டி ஜெயில்ல போட்டுடுவாறு. இத பாத்து குந்தவை முதல் மந்திரி அவன் இப்புடி கொரங்கு மாதிரி குதிச்சது தப்பு தான் இவன நான்தான் இலங்கை அனுப்பி வச்சன் இவன ரிலீஸ் பண்ணுங்கன்னு கேக்கறா.

முதல் மந்திரி குந்தவைய பாத்து அல்ரெடி அந்த கெழட்டு சிங்கம் நந்தினி பின்னாடி குட்டி போட்ட நாய் மாதிரி சுத்துது, இப்ப பார்த்திபனும் அந்த பியூட்டிய பாத்து பொட்டி பாம்பா அடங்கிட்டான், இவனும் நந்தினிய பாத்து ஜொல்லு விட்டுருப்பான், இவனுக்கு ஒரு டெஸ்ட்டு வை. இவன ஆதித்த கரிகாலன்ட அனுப்பி அவர இங்க வர வேணாம்ன்னு சொல்லு அப்ப தான் நான் நம்புவேன்னு சொல்றார். சரி இவன எப்புடி தனியா அனுப்பறதுன்னு நெனைக்கும் போது. முதல் மந்திரி Spy with in Spy ன்னு புது கான்சப்ட் சொல்றாரு. இவனோட ஆல்வார்கட்டியான் நம்பிய அனுப்புவோம் அவன் என்னோட சிஷ்யன். சரின்னு ஒத்துகிட்டு ஹீரோ கைல லட்டர குடுத்து அங்க இருந்து தொரத்தி விடுறா குந்தவை.

இந்த நேரத்துல வானதி எப்புடியாவது அருள்மொழிவர்மன பாத்தாகனும்ன்னு சொல்லி தனியா ஒரு ஜிப்சில போய்கிட்டு இருக்கா. போற வழில நம்ம ஹீரோவ பாத்ததும் என்னோட ட்ராவல்ல ஜாயின் பண்ணிகிறியா தனியா போக எனக்கு பயந்து வருதுன்னு சொல்றா. அதலாம் முடியாது சொல்லிட்டு நம்ம ஹீரோ கொஞ்ச தூரம் போகும் போது. ஐயோ ஆத்தான்னு ஒரு சவுண்டு திரும்பி பாத்தா ஜிப்சி ஓட்டிட்டு வந்த லேடி ட்ரைவர் ஒரு மரத்தடில கட்டி போட்டு கெடக்கா.

சரி எவனோ வானதிய கிட்னாப் பண்ணிடான்னு நெனச்சு அவள தேடி போகும் போது நைட் ஆகிடுது. அந்த சைடு எதோ ஒரு காரனுத்துக்காக மதுராந்தகர் அந்த பக்கம் குதரைல வரார். வேட்டு சத்தம் கேட்டதும் குதர அவர தூக்கிட்டு காட்டு பக்கமா ஓடுது. இத பாத்த நம்ம ஹீரோ மதுராந்தகர காப்பாத்தறதா இல்ல வானதிய காப்பத்தறதான்னு கன்பீஸ் ஆகி அங்கயே நின்னுடறான்.

சரி நைட்டு இங்கயே தங்குவோம்ன்னு ஒரு ஓல்ட் ஹவுச நோக்கி போகும் போது வீல்ன்னு ஒரு சவுண்டு. கிட்ட போனதும் ஒரு சின்ன பைய்யன் அம்மான்னு கத்தறான். அந்த பையன தேடி வந்த ஒரு காட்டு வாசி க்ரூப் நம்ம ஹீரோவ பாத்ததும். ஹீரோவையும் குண்டுகட்டா தூக்கிட்டு போய்டுறாங்க.

ஒரு காட்டுக்குள்ள போனதும் அந்த பையன ஒரு எடத்துல ஒக்கார வச்சுட்டு வெய்ட் பண்றாங்க. அந்த டைம் நந்தினி சும்மா அரேபிய குதர மாதிரி வந்து இறங்குரா. அந்த சின்ன பையன் ஹமாம் விளம்பரத்துல வர மாதிரி மம்மின்னு சொல்லிக்கிட்டு நந்தினிய போய் கட்டி புடிச்சுகறான். ஹீரோவுக்கு ஒரே ஷாக் அந்த கெழட்டு சிங்கம் எப்ப குட்டி போட்டுச்சுன்னு



அங்க இருந்த காட்டுவாசி க்ரூப்ப பாத்து நந்தினி பாண்டிய மன்னன்ன கொண்ண ஆதித்த கரிகாலன தஞ்சாவூர் வர சொல்லிருக்கன், அவன அங்க வச்சு போட்றுவோம்ன்னு ப்ளான் போடுறா.சரி யார் கொல்றதுன்னு முடிவு பண்ணும் போது நான்தான் கொல்வேன்னு சொல்லி கத்திய தூக்கிட்டு கம்பீரமா அங்க இருந்த சிம்மாசனத்துல சிலுபிகிட்டு நந்தினி ஒக்காரும் போது.



அங்க நின்னுகிட்டு இருந்த ஒரு காட்டு வாசி ஏஞ்சல் கரிகாலன தஞ்சாவூருக்கு வர விடாம தடுக்க ஒரு Spy போய் கிட்டு இருந்தான். அவன புடிசாச்சுன்னு சொல்லி நம்ம ஹீரோவ நந்தினி காலடில கொண்டுவந்து போடுறாங்க.

இவன விடுங்க இவன் என்னதான் தலைகீழா குட்டிகரணம் அடிச்சாலும் கரிகாலன் கண்டுக்க மாட்டான் சொல்லிட்டு கெளம்பி போறா நந்தினி. ஹீரோவ அங்கயே கட்டி போட்டு எல்லாரும் போயிடறாங்க. ஹீரோவ பின்தொடர்ந்து வந்த ஆழ்வார்க்கடியான் நம்பி அங்க இருந்து ஹீரோவ எஸ்கேப் பண்றான். சரி வானதிக்கும் மதுரந்தகர்க்கும் எதோ ஆபத்து அவங்கள காப்பத்தனும்ன்னு நம்ம ஹீரோ சொல்லும் போது.

அதுக்கு ஆழ்வார்க்கடியான் நம்பி >> முதல் மந்திரி ஆளுங்கதான் வானதிய தூக்கிட்டு போனது. இந்நேரம் குந்தவை கூடத்தான் வானதி இருப்பா, மதுராந்தகரையும் முதல் மந்திரி காப்பாத்தி இருப்பார் நீ கரிகாலன் சார பாக்க கெளம்புன்னு சொல்லி அனுப்பி வைக்கறான்


சரின்னு சொல்லிடு நம்ம ஹீரோவும் குதுரைல ஏறி லைட்ட விட ஸ்பீடா போறான்.


ஆழ்வார்க்கடியான் நம்பி சொன்ன மாதிரி குந்தவை கூடத்தான் வானதி இருக்கா. அவங்க ரெண்டுபேரும் நாகபட்டினம் போறாங்க. இந்த கேப்புல பெஸ்ட் பேட்ஸ்மேன் கியூர் ஆகிடுவாறு. அவர ஹாஸ்பிட்டல்ல இருந்து பிக்கப் பண்ணிக்கிட்டு நம்ம திம்சு கட்டையும் சேந்தன் அமுதனும் குந்தவைகிட்ட கூட்டிட்டு வராங்க.

குந்தவை அருள்மொழிவர்மன்ட்ட நம்ம அப்பா இப்புடி சூம்பி போன எலி மாதிரி ஆனதுக்கு காரணம் நந்தினிதான். நந்தினி யாருன்னா உன்ன இலங்கைல காப்பத்துனாலே அந்த deaf and dumb பாட்டி. அவ மகதான்னு எனக்கு சந்தேகம் வருது. ஏன்னா அவ உருவமும் நந்தினி உருவமும் ஒரே மாதிரி இருக்காம். எதுக்கு அந்த நந்தினிய பாத்து நீங்க கவலை படுரிங்கன்னு நா அப்பாட்ட கேக்கும் போது. நம்ம அப்பாவோட First டாவு அந்த பாட்டி தானாம். சோ அவ பொண்ணு தான் நம்மள போட்டுதள்ள இங்க சுத்தறா. என்ன இருந்தாலும் அவளும் நம்ம பிளட்டுதான, நாம எல்லாத்தையும் எடுத்து சொல்லுவோம்ன்னு சொல்றா குந்தவை. இத கேட்டு ஸ்டன் ஆகிப்போறன் நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன்(அருள்மொழிவர்மன்).



இத எல்லாம் பாத்துகிட்டு இருந்த நம்ம திம்சு சேந்தன் அமுதன பாத்து, நா உன்ன லவ் பண்ணலன்னா என்ன பண்ணுவன்னு கேட்பா. என்ன ஒரு கோட்டார் அடிச்சுட்டு நைட்டு உன்ன நெனச்சு கவித எழுதிட்டு மறந்துருவன்னு சொன்னா சேந்தன் அமுதன். ஆசபட்டவங்கள மப்படிச்சுட்டு மறந்துட்டு போறதுக்கு நா ஒன்னும் அவ்ளோ நல்லவ இல்ல. இவங்க பேசி முடிச்சதும் எப்புடியும் நம்ம கூடத்தான் தஞ்சாவூர்க்கு Boat ல வருவாங்க. நா அந்த கேப்புல பெஸ்ட்டு பேட்ஸ்மேன போட்டாலும் போட்ருவேன் சோ நீ மட்டும் அவர பிக்கப் பண்ணிக்கிட்டு போ சொல்லிட்டு அங்க இருந்து கெளம்பரா நம்ம திம்சு.



இத்தோட மூனாவது பார்ட் முடிஞ்சுது.

அடுத்த என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியல. சரி அடுத்த பார்ட்ட பத்தி அப்பறம் சொல்றன்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...